Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்செங்கோடு: அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் உபகோயிலான
அருள்மிகு பெரியமாரியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில், நான்கு கடைகள் வாடகைதாரர்கள் இல்லாத நிலையில், சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. தற்போது மழைக்காலம் என்பதாலும், அருள்மிகு பெரியமாரியம்மன் திருக்கோயில் திருவிழா பூச்சாட்டுடன் துவங்க உள்ள நிலையிலும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடலாம் என்ற அபாயகரமான நிலையில் உள்ளது.
இக்கட்டிடத்தை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நலன் கருதி இடித்து அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனைக் தொடர்ந்து சிதிலமடைந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி திருக்கோயில் பாதுகாப்பு கருதி உடனடியாக மதில்சுவர் அமைக்கும்
பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த ஏற்பாட்டினை திருக்கோயில் உதவி ஆணையர்/செயல் அலுவலர் மு.இரமணிகாந்தன் மற்றும் அறங்காவலர் குழுத்தலைவர் செ. தங்கமுத்து, அறங்காவலர்கள் செ.ர. கார்த்திகேயன், பி. அர்ஜீனன், மோ. அருணா சங்கர், டி.சி. பிரபாகரன் ஆகியோர் செய்துள்ளனர்.
இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் திருக்கோயில் நிர்வாகத்திற்கு பாராட்டுகளையும், தங்களது மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்.